கொரோனா தொற்று உறுதி ; நீர்கொழும்பு தனியார் மருத்துவமனை ஊழியர்கள் தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சைக்காக வந்த 56 வயதான ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கட்டுவாபிட்டியில் வசிக்கும் இந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று நீர்கொழும்பு தலைமை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். மருத்துவமனையின் ஊழியர்கள் குழு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.